தேசியக்கொடி வடிவில் அம்மனுக்கு காய்கறி அலங்காரம்

x

கோவையில் காய்கறிகளை பயன்படுத்தி தேசியக்கொடி வடிவில் கோயில் மற்றும் அம்மனை அலங்கரித்திருந்த‌து பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கோவையில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஐந்தாயிரம் கிலோ காய்கறிகளை பயன்படுத்தி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. கோயில் முழுவதும் காய்கறிகளை மூவர்ண கொடி போன்று அலங்காரம் செய்யப்பட்டிருந்த‌து பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு நாட்கள் பூஜை நடைபெறும் என்றும், பின்னர் காய்கறிகள் பக்தர்களுக்கு வழங்கப்படும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்