நள்ளிரவில் தீ பிடித்து எரிந்த வீடு.. தூங்கிய நிலையிலேயே பிரிந்த 5 உயிர்கள்

x

உத்தரப்பிரதேசத்தில் நள்ளிரவில் வீடு ஒன்று தீ பிடித்து எரிந்த‌தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மாவ் மாவட்டம் ஷாபூர் கிராமத்தில் வீடு ஒன்று தீ பிடித்து எரிவதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்த‌து. விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்த‌து, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉயள்ளது. விபத்துக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்