தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் நீடித்த மர்மம்.. உண்மைகளை உடைத்த அறிக்கை - என்ன சொல்கிறார் இறந்த ஸ்னோலினின் அம்மா?

x

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருப்பது ஆறுதல் அளிப்பதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரன் உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கூறுகையில், இந்த அறிக்கை தங்களுக்கு சந்தோஷம் அளிக்காவிட்டாலும், ஆறுதலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்