மேடையில் பேசிக்கொண்டிருந்த டிடிவி தினகரன்.. திடீரென கலைந்துச் சென்ற தொண்டர்கள்

x

திருப்பத்தூரில் நடைபெற்ற அமமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், டிடிவி தினகரன் பேசிக் கொண்டிருந்த போது, தொண்டர்கள் கலைந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அக்கட்சியின் பொதுச் செயலளார் டிடிவி தினகரன், மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, கலைந்துச் சென்ற தொண்டர்கள், உணவு அருந்தும் பகுதியில் வரிசையில் நின்றனர்.

இதை சுதாகரித்த தினகரன், தான் பேசிக் கொண்டிருக்கும் போது, அனைவரும் சாப்பிட செல்கிறீர்களா என, நகைச்சுவையாக கேட்டார்.

இதனிடையே, மண்டத்தின் நுழைவாயிலில் நின்றிருந்த பொறுப்பாளர்கள், தொண்டர்கள் வெளியே செல்லாதவாறு கதவை அடைத்ததால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்