"ரங்கா.. கோவிந்தா..'' கோஷங்கள்.. திருச்சி ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு - பக்தர்கள் பரவசம்

x

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில், சிறப்பு பூஜைகளுடன் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கடந்த 22ஆம் தேதி அன்று திருநடந்தண்டகத்துடன் தொடங்கி தொடர்ந்து டிசம்பர் 23ஆம் தேதி முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

இராபத்து உற்சவத்தின் முதல் திருநாளான இன்று அதிகாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் அரங்கநாதர் காட்சியளித்தார்.

மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட அரங்கநாதர் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் வழியாக ஆயிரம் கால் மண்டபம் எனப்படும் திருமா மணிமண்டபம் வந்தடைந்தார்.

அப்போது திரளான பக்தர்கள் பங்கேற்று ரங்கா, ரங்கா முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்து, சொர்க்க வாசல் வழியாக சென்று வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்