தடைகளை உடைத்தெறிந்த திருநங்கை - பார் கவுன்சில் கொடுத்த கவுரவம்

x

செங்கல்பட்டு புதுப்பாக்கம் அரசு சட்டக் கல்லூரியில் படித்த முதல் திருநங்கை கண்மணிக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வழங்கினார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வேளச்சேரியை சேர்ந்த தம்பதியின் கடைசி மகனாகப் பிறந்த கண்மணி, பாலின மாறுபாட்டுக்குப் பிறகு குடும்பத்தினர் ஏற்க மறுத்த நிலையில், புதுப்பாக்கம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்துள்ளார்.

இதன்மூலம் அந்த சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞரான முதல் திருநங்கை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்