தூங்கும் போது நேர்ந்த விபரீதம்... பள்ளி சிறுமியின் உயிரை குடித்த பாம்பு..! - வலியால் துடி துடித்து உயிரிழந்த சோகம்...

x

திருவண்ணாமலையில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எடப்பிறை கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரின் மனைவி அபிதா. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டாவது மகளான கல்பனாவை இரவில் பாம்பு கடித்துள்ளது. இதனால், வலியால் துடித்த கல்பனாவை, திருசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில், திடிரென கைகள் வீங்கி மாணவிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்