Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28.09.2022)

x
  • தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்....சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் .....காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
  • சென்னை அசோக்நகர் இல்லத்தில், பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓ.பி.எஸ் சந்திப்பு....அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கிய நிலையில், அடுத்தகட்ட ஆலோசனை.
  • ஜெயலலிதா காலத்தில் இருந்த தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைவோம்....பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்த பின் ஓ.பி.ஸ் பேட்டி.
  • ஒரே பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளையால் குழப்பம்....தன் பக்கம் தவறில்லை என நீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி விளக்கம்.
  • திருப்பதி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி.....சின்ன சேஷ வாகனத்தில் அருள்பாலித்த மலையப்ப சுவாமி .
  • அதிக ஆவணங்கள் பதிவாகும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் தட்கல் டோக்கன் வசதி.....அறிமுகம் செய்து வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்.
  • ஆயுத பூஜையையொட்டி பல மடங்கு கட்டணத்தை உயர்த்திய தனியார் பேருந்துகள்.....அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகும் கட்டணம் குறைக்கப்படவில்லை என புகார்.
  • பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கும் ஆர்வத்தில், பலர் அதன் நாவலை படிக்க தொடங்கி உள்ளனர்....சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த படக்குழுவினர் உற்சாகம்.


Next Story

மேலும் செய்திகள்