Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.10.2022) | 1 PM Headlines | Thanthi TV

x

5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.....இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் என பெருமிதம்.

நடிகர் சிவாஜியின் பிறந்தநாளையொட்டி, அரசு சார்பில் மணிமண்டபத்தில் மரியாதை.....முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், சிவாஜி குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர்.

மத்திய அரசுடன் சண்டை போடுவதற்காக தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை....தேவையான விஷயங்களை மாநில அரசு கேட்டுதான் பெற வேண்டும் எனவும், சசிகலா கருத்து.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு....ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் குறித்து பேசியதாக தகவல்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும்....பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு.

அதிமுகவில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே விருப்பம் ...தாம் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை என சசிகலா பேட்டி

ஓட்டுக்காக மட்டுமே ஒரே இந்து என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது...இருளர் மனித உரிமை மாநாட்டில் திருமாவளவன் பேச்சு.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்....சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


Next Story

மேலும் செய்திகள்