"ஏன் பஸ் ஸ்டாப்ல நிறுத்த மாட்டியோ" - அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய பயணி - திருப்பூரில் பரபரப்பு

x

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி 25க்கும் மேற்பட்ட பேருந்துகள்

திருப்பூர் சாலையில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் பனப்பாளையம் என்கிற பேருந்து நிறுத்தத்தில்,அரசு பேருந்து ஒன்று நிறுத்தப்படவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பணபாளையத்தில் நின்றுகொண்டிருந்த பயணி ஒருவர், தனது நண்பருடன் பேருந்தை பின் தொடர்ந்து சென்று, பேருந்தின் முன்னால் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி ஓட்டுனர் ராஜூ என்பவரை தாக்கி உள்ளனர். பாயிண்ட் டூ பாயிண்ட் என்பதால் பேருந்து நிறுத்தப்படவில்லை என ஓட்டுநர் விளக்கமளித்தபோதும் , அவர்கள் கேட்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் அப்பகுதி வழியாக வந்த அரசு பேருந்தின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திருப்பூர் சாலையில் 25 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய இருவரையும் பல்லடம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து போராட்டம் கை விடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்