கொடுக்கல், வாங்கல் தகராறில் விபரீதம்.. கொலை செய்து வாய்க்காலில் வீசிய நண்பர்கள் - திருப்பூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் அருகே விவசாயி மாயமான விவகாரத்தில் திடீர் திருப்பமாக, அவரது நண்பர்களே அவரை அடித்து கொன்றது தெரியவந்துள்ளது.
x

மந்திரிபாளையத்தை சேர்ந்தவர் சம்பத்குமார் கடந்த மாதம் மாயமானார். இதனையடுத்து அவரை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் போலீசாரிடம் புகாரளித்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பத்குமார் தனது நண்பர் சிவசுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று மது அருந்தியது தெரியவந்தது. தொடர் விசாரணையில், மது அருந்தும்போது ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறில், சம்பத்குமாரை சிவசுப்பிரமணியன் கட்டையால் தாக்கி கொன்றதும், பின்னர் அவரும், அபிமன்யு என்பவரும் சேர்ந்து சம்பத்குமாரின் உடலை கை கால்களை கட்டி வாய்க்காலில் வீசியதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், சம்பத் குமாரின் உடலை தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்