திருப்பதி தேவஸ்தான அதிகாரி மகன் கவலைக்கிடம்...அடுத்த மாதம் கல்யாணம்.. திடீர் மாரடைப்பு - பத்திரிகை வழங்க சென்ற போது நடந்த விபரீதம்

x

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியின் மகனுக்கு ஜனவரி 26ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக உள்ளவர் தர்மா ரெட்டி. இவரின் மகன் சந்திரமவுலி ரெட்டி.

இவருக்கும் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கும் அடுத்த மாதம் 26ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்தது.

இந்த திருமணத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நடத்தி வைப்பதாகவும் இருந்தது.

இதனை தொடர்ந்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே சந்திரமவுலி ரெட்டி திருமண அழைப்பிதழ்களை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி வந்தார்.

அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எக்மோ கருவி பொறுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தாலும் உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டதால் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்களின் கண்காணிப்பில் சந்திரமவுலி ரெட்டி உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்