இருட்டுக்கடை அல்வா பெயரில் போலியான கடை... கடை உரிமையாளர் மீது 6 பிரிவுகளில் வழக்கு

நெல்லையில், இருட்டுக்கடை அல்வா பெயரில், போலியாக கடை நடத்தி வந்த நபர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
x

பிரபல இருட்டுக்கடை அல்வா பெயரில், போலியாக கடைகள் நடத்தப்பட்டு வந்தது. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெல்லை, இருட்டுக்கடை அல்வா கடையின் தரப்பிலிருந்து புகாரளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், கடந்த 2008-ஆம் ஆண்டே இருட்டுக்கடை அல்வா என போலியாக கடை நடத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது நெல்லை சந்திப்பு பகுதியில் செய்யது முகைதீன் என்பவர் போலியாக இருட்டுக்கடை அல்வா என்ற பெயரில் கடை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்நபர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்