கார்த்திகை தீபத் திருவிழா கொளுந்துவிட்டு எரிந்த தீ-யில் - திடீரென குதித்த நபர்..?

x

கார்த்திகை தீபத் திருவிழா கொளுந்துவிட்டு எரிந்த தீ-யில் திடீரென குதித்த நபர்..? - வெளியான அதிர்ச்சி வீடியோ

நெல்லையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது கொழுந்து விட்டு எரிந்த தீயினுள் குதித்த கூலித்தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சமாதானபுரம் அருகே அம்பேத்கர் காலனியில் கார்த்திகை திருநாளின் போது சொக்கப்பனை தீயிட்டு கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது திடீரென தீயினுள் குதித்த கூலித் தொழிலாளி முருகன் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்