"கட்டாய ஓய்வு அளித்துவிடுவதாக மிரட்டல்"...பிஎஸ்என்எல் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

x

சென்னை, பிராட்வே பகுதியில் பி.எஸ்.என்.எல்., பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி, கூட்டுறவு சங்கத்தின் அனைத்து ஊழியர் தொழிற்சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஊதியத்தை கேட்டதால் ஏற்கனவே 54 ஊழியர்கள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டதாகவும், தங்களையும் மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்