ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு கோரிக்கை
x

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையினை திறக்க வேண்டும் என தூத்துக்குடி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஒப்பந்ததாரர் சங்கத்தினர், ஸ்டெர்லைட் ஆலையை நம்பி 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளதாகவும், அவர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், நிபுணர்கள் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையினை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்