"இது தான் டா புது பிசினஸ்"..3 பேரிடம் ரூ.15 லட்சம் வாங்கி சொகுசாக வாழ்ந்த நபர் - சென்னையில் பரபரப்பு

x

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்த காசி விஸ்வநாதன் என்பவர் தான் துவங்க உள்ள புதிய தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் அதில் பங்கு தருவதாக கூறியும் மதன், சக்தி, சாய்கணேஷ் ஆகிய 3 பேரிடம் 15 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். இந்நிலையில் லாபத்தில் பங்கு தாராமல் ஏமாற்றி வந்த காசி விஸ்வநாதனிடம் பணத்தை 3 பேர் திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது . இதையடுத்து மதன் உள்ளிட்ட 3 பேர் அளித்த புகாரின் பேரில் போலீசார் காசி விஸ்வநாதனை கைது செய்தனர். மோசடி செய்த பணத்தில் வீடு கார் வாங்கி காசி விஸ்வநாதன் சொகுசாக வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்