அரசு பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்.. முகத்தில் சூடு வைத்த தலைமை ஆசிரியை.. மனம் உடைந்த தாய்

சிறுமியின் முகத்தில் சூடு வைத்ததாகக் கூறி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்குப் பதியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x

திருவண்ணாமலை மாவட்டம் மணிமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் உஷாராணி... இவர் கடந்த செவ்வாயன்று, அப்பள்ளியில் படிக்கும் 4ம் வகுப்பு மாணவி கவுதமி சரியாக படிக்கவில்லை என தெரிவித்து தீக்குச்சியைப் பற்ற வைத்து முகத்தில் சூடு வைத்துள்ளார்... மாலௌஇ அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த கவுதவி, பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்... சிறுமியின் தாயார் மணிமேகலை தலைமை ஆசிரியை உஷா ராணியிடம் கேட்கவே, அவர் சரிவர பதிலளிக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து கவுதமியின் தாய் மணிமேகலை கிராம பொதுமக்களுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் உஷாராணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரளித்துள்ளார்... இதன் பேரில் காவல்துறையினர் உஷாராணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்