வெளியூர் சென்று வந்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி - வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை | Thiruvallur

x

திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் மின்வாரிய அதிகாரி வீட்டில் 120 சவரன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலையத்தில் துணை மேலாளராக பணியாற்றி வரும் பழனிசாமி, அரசு குடியிருப்பில் வசித்து வருகிறார்.

திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்தாருடன் வெளியூர் சென்ற நிலையில், அவரது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்துள்ளனர்.

இதன்பின்னர் பழனிசாமி வீடு திரும்பிய போது, பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு 120 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி, 35 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்