CUSTOMER போல் வந்த அதிகாரிகள்... ரூ.290 பொருளுக்கு 20 ஆயிரம் அபராதமா?

x

வாணியம்பாடியில் ஹார்டுவேர் கடையில் நடைபெற்ற சோதனையின்போது, வணிகர் சங்கத்தினருக்கும், வணிக வரித்துறையினருக்குமிடையே நடைபெற்ற வாக்குவாதத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஹார்டுவேர் கடையில் பொருட்களை வாங்குவது போல் சோதனை நடத்திய வணிகவரித்துறை அதிகாரிகள், ஜி.எஸ்.டி பில் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்வதாக 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த கடையின் உரிமையாளர், கொட்டேஷன் தொகையை மட்டுமே எழுதி தந்ததாக அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார். தொடர்ந்து அங்கு வந்த வணிகர் சங்க நிர்வாகிகளும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்