"பிறந்த நாளில் தாய் ஆசீர்வாதம் இல்லை" - பிரதமர் மோடி உருக்கம்

x

"பிறந்த நாளில் தாய் ஆசீர்வாதம் இல்லை" - பிரதமர் மோடி உருக்கம்

பிறந்த நாளில் தனது தாயை சந்தித்து ஆசிப்பெறவில்லை என்றாலும், கடினமாக உழைக்கும் தாய்மார்களின் வாழ்த்து கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு மாநாட்டில் பேசிய அவர், ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தனது தாயின் பாதங்கள் தொட்டு ஆசிப்பெறுவது வழக்கம் என்றதுடன், இன்று பணி நிமித்தமாக அவரை சந்திக்கவில்லை என்றார். ஆனாலும், பழங்குடியின மற்றும் கடினமாக உழைக்கும் தாய்மார்களின் ஆசீர்வாதம் தனக்கு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்தார். லட்சக்கணக்கான தாய்மார்கள் தன்னை ஆசீர்வதித்துள்ளதால், தனது தாய் மனைநிறைவு பெறுவதுடன், மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்