வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்... நாளை வெளுத்து வாங்க போகும் கனமழை

x

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இன்று கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாளை குமரி, நெல்லை, தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளையும், நாளை மறுநாளும் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தென்மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய இலங்கை கடலோரத்திலும், மன்னார் வளைகுடாவிலும் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்