திமிங்கலத்தின் கழிவு கடத்தல்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தமிழக போலீஸ்!

x

திருச்செந்தூர் அருகே சுமார் 25 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் கழிவுகளை காரில் கடத்தி சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர் அருகே வாசனை திரவியங்களுக்கு பயன்படுத்தப்படும் திமிங்கலத்தின் கழிவான அம்பர்கிரிஷ் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை தொடர்ந்து, உடன்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நெல்லையிருந்து குலசேகரன்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்த வாகனத்தை மறித்து போலீசார் நடத்திய சோதனையில், சுமார் 25 கோடி மதிப்பில் திமிங்கலத்தின் அம்பர்கிரிஷ் கைப்பற்றப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்