திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு.. பல உயிர்களை காவு வாங்கிய சோகம் - மலேசியாவில் நடந்த பயங்கரம்

x

மலேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.

சிலாங்கூர் மாகாணம் பத்தாங்காலி நகரில் உள்ள விவசாய பண்ணையை உரிய அனுமதி இல்லாமல், அதன் உரிமையாளர்கள் சுற்றுலாப்பயணிகள் முகாம்கள் அமைத்து தங்கும் இடமாக பயன்படுத்தி வந்தனர்.

நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு முகாமிட்டிருந்த 18 பேர் பலியான நிலையில், தற்போது இறப்பு எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மண்ணிற்குள் புதையுண்டவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்