ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை...தப்பியோடிய கும்பலுக்கு போலீசார் வலை | Chennai

x

சென்னை திருமங்கலத்தில், ஜாமீனில் வெளிவந்த ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் மீது, வில்லிவாக்கம், திருமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வில்லிவாக்கம் பகுதியில் டபுள் ரஞ்சித் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பாக, சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த நிலையில், ரவுடி பத்மநாபன், திருமங்கலம் வி.ஆர். மால் எதிரே நடந்து சென்றபோது, ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயத்துடன் தப்பிச் சென்ற பத்மநாபனுக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஜெயலீசன் என்பவர் தலைமையிலான கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்