"என்னை கொலை செய்ய சதி நடப்பது முன்பே தெரியும்" - உயிர் தப்பிய இம்ரான் கான் பகீர்

x

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் மக்களுக்கு உரையாற்றிய அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கொலை செய்ய சதி நடப்பது முன்பே தெரியும் என்றார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வசிராபாத்தில் பேரணியில் சென்று கொண்டிருந்த இம்ரான் கான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காலில் குண்டு பாய்ந்த நிலையில் லாகூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம், காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருப்பது குறித்து எக்ஸ்ரே படங்களை காட்டி மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர். அதன் பின்னர், பாகிஸ்தான் மக்களுக்கு உரையாற்றிய இம்ரான் கான், தன்னை கொலை செய்ய சதித்திட்டம் நடப்பது ஒருநாள் முன்பே தெரியும் என்றார். தனது காலில் 4 தோட்டாக்கள் பாய்ந்த‌தாகவும், குண்டு பாய்ந்த‌தும் அருகில் இருந்த 2 பேர் காப்பாற்றியதாகவும் தெரிவித்தார். தன்னை கொலை செய்ய 4 பேர் வந்ததாக தெரிவித்த இம்ரான் கான், அதற்கான வீடியோ இருப்பதாகவும், தனக்கு ஏதேனும் ஆனால் வீடியோக்கள் வெளியிடப்படும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்