இறந்துபோன நோயாளி.. அடுத்ததாக டாக்டர் செய்த பகீர் காரியம் - அதிரடி உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்

x

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிச்சுமணி என்பவரின் மகள் ஸ்ரீசுபிதா, இந்திய மருத்துவ ஆணையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், தனது தந்தையிடம் உள்ள சொத்துகளை மாற்றிக் கொள்வதற்காக, அவர் நலமுடன் இருப்பதாக கோவையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற மருத்துவ சான்றிதழ் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரை விசாரித்த தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், ராதாகிருஷ்ணனின் மருத்துவர் பதிவை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்