ஆசையாக வளர்த்த நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி

உதகை அருகே கல்லக்கொரை கிராமத்தில், நள்ளிரவு குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை, நாயை வேட்டையாட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லக்கொரை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. அப்போது அங்கிருந்த வளர்ப்பு நாயை கண்ட சிறுத்தை அதை வேட்டையாடுவதற்காக துரத்தி சென்றுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்