திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த ஜேசிபி.. தொப்பென பள்ளத்தில் குதித்த ஓட்டுநர்.. திக் திக் காட்சி

x

உளுந்தூர்பேட்டை அருகே பள்ளத்தில் சிமெண்ட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மலைஅடி குன்னத்தூர் கிராமத்தில் சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கலவை இயந்திரம் மூலமாக கால்வாயில் சிமெண்ட் கான்கிரீட் போடப்பட்டு வந்த நிலையில், எதிர்பாராத விதமாக அந்த கலவை இயந்திரம் கால்வாய் போடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதை சுதாரித்துக் கொண்ட கலவை இயந்திரத்தின் ஓட்டுநர், விபத்துக்கு சில வினாடிகளுக்கு முன்பு அதிலிருந்து கீழே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்