ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்த சம்பவம்...கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த மோதல்

x

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் சக்திவேல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டியில், திருமணமான பெண்ணை இருவர் காதலிப்பது சம்பந்தமாக, ஆட்டோ ஓட்டுநர் சக்திவேலுக்கும், சுமன் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆட்டோ ஓட்டுநர் சக்திவேல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முக்கிய நபரான சுமன் மற்றும் அவரது நண்பர்கள் வசந்தகுமார், பட்டீஸ்டா குணா ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக மகேஷ், மணிகண்டன், அஜித் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்