சேலத்தை அதிரவைத்த சம்பவம்.. பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

x

தனியார் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், லத்துவாடி கிராமத்தை சேர்ந்த சுதா என்பவர், முத்த மகளை பள்ளி பேருந்தில் ஏற்றி விடுவதற்காக வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை பவனிகாஸ்ரீ வந்ததை யாரும் கவனிக்கவில்லை. கீழே நின்றுக் கொண்டிருந்த குழந்தை மீது பள்ளி பேருந்தின் சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதையடுத்து பள்ளி பேருந்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தையின் சடலத்தை மீட்டு, வீரகனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்