ஜெயலலிதா வந்திறங்கிய ஹெலிபேட் | 8 ஆண்டுக்கு பின் செல்ஃபி எடுக்கும் மக்கள் | காரணம் என்ன..?

x

ராணிப்பேட்டை அருகே, தொழிலதிபர் வந்த ஹெலிகாப்டரை பொதுமக்கள் குடும்பத்தோடு சென்று பார்வையிட்டதோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். முத்துக்கடை அடுத்த மாந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள ஹெலிபேடில் 8 ஆண்டுகளுக்கு பின் ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது பிரசாரத்திற்காக 8 ஆண்டுகளுக்கு முன் இதே ஹெலிபேடில், வந்திறங்கினார். தற்போது சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையை பார்வையிட பெங்களூருவிலிருந்து அதன் உரிமையாளர் ஹெலிகாப்டரில் வந்துள்ளார்.

சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின் தங்கள் குடியிருப்பு பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதால், குடும்பத்துடன் சென்று அதனைப் பார்த்து ரசித்த பொதுமக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்