தலைக்கேறிய மது போதை... நண்பனை இரும்பு கம்பியால் தாக்கிய நபர் | Chennai | Fight | Friends

x

சென்னையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பரை இரும்பு கம்பியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது நண்பர் பாபு என்பவருடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், பாபுவை இரும்பு கம்பியால் தாக்கி தப்பி சென்றுள்ளார். இந்நிலையில், அக்கம்பக்கத்தினர் பாபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காவல்நிலையத்தில் சி பிரிவு குற்றவளியாக மணிகண்டன் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்