உலகையே உறைய வைத்த 1 வயது குழந்தையின் மரணம்

x

உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரில் ரஷ்ய படைகள் ஏவுகணை மழை பொழிந்ததைத் தொடர்ந்து இடிபாடுகளில் இருந்து ஒரு வயது ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

தலைநகர் கீவ், கார்கிவ், மற்றும் கிரிவி ரிஹ் நகரங்கள் ஏவுகணை தாக்குதல்களால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின.

உக்ரைன் வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட போது ஒரு வயதே ஆன பச்சிளங்குழந்தை சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களால் 4 பேர் பலியானதாகவும் மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவலகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்