தற்கொலை செய்து கொண்ட தம்பதி..பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள்-போலீசிடம் சிக்கிய அதிர்ச்சி கடிதம்

x

ஓசூரில், வாழ்க்கையை நடத்த முடியாமல், மனமுடைந்த கணவன் மனைவி இருவரும், கடிதம் எழுதி வைத்துவிட்டு, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

ஒசூர் ராயக்கோட்டை பகுதியில் வசித்து வந்த மாதேஷ் - கலைவாணி தம்பதிக்கு, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். வழக்கம்போல் இரவில், தனது மகனுடன் சேர்ந்து, மாதேஷ் - கலைவாணி தம்பதி உணவு அருந்தியுள்ளனர். ஆனால், காலை நேரத்தில் நீண்ட நேரமாகியும் எழுந்தாததால், இருவரும் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு மகன் அதிர்ச்சியடைந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, தற்கொலைக்கு முன் தம்பதி இருவரும் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் மீட்டனர். அதில், பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைக்க முடியாததாலும், மனைவி கலைவாணி தொடர்ந்து உடல்நிலை கோளாறால் பாதிக்கப்பட்டதாலும், வாழ்ககையை நடத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்