13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் | பெற்ற தந்தை செய்த அதிர்ச்சி சம்பவம்

x

வேலூர் மாநகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஒருவர் மனைவியை பிரிந்து தன் 15 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

இதனிடையே தன் மகளிடம் அந்த நபர் அத்துமீறி வந்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து சமூகநலத்துறைக்கு மருத்துவர்கள் அளித்த தகவலின் படி விசாரணை நடந்தது. அப்போது தந்தையே மகளிடம் அத்துமீறியது உறுதியான நிலையில் போலீசார் அவரை போக்சோவில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்