சுவரில் இருந்த ரத்தக்கரை..காயங்களுடன் கிடக்கும் பேராசிரியை.. கணவர் உறவினரின் பகீர் சம்பவம்

x

கள்ளக்குறிச்சி அருகே, ஆசை வார்த்தைகள் கூறி, 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தாழ்தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர், கர்நாடக மாநிலம் பன்னூரில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, பெட்டிக் கடையில் இருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி காதலித்துள்ளார்.

பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர், சிறுமியை வரவழைத்து திருமணம் செய்துள்ளார்.

பின்னர் கட்டாயப்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அறிந்த மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா கொடுத்த புகாரின் பேரில், சேகர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்