"எனக்கு உன்ன விட அதுதான் முக்கியம்" - திருமணம் செய்தபின் பிரிந்த காதலி - காதலன் விபரீத முடிவு

x

கள்ளக்குறிச்சி அருகே பொற்படாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அருள்பிரகாஷ். இவரும் அதே பகுதியைச் சேர்ந்தே பெண் ஒருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி, கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் சரணடைந்தார். அப்போது இருவீட்டாரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில், இளம்பெண் தனது பெற்றோருடன் செல்வதாகவும், மேற்படிப்பு படித்து முடித்து மீண்டும் அருள்பிரகாசுடன் சேர்ந்து வாழ்வதாக கூறி, தனது பெற்றோருடன் சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த அருள்பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்