ரிவர்ஸ் எடுக்கும் போது பயங்கரம் - பேருந்து மோதி மூதாட்டி பலி

x

அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து பணிமனை அம்பத்தூர் தொழிற்பேட்டை அரசு பேருந்து பணிமனையில் உள்ளே தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த பணியாளர் மூதாட்டி பேபி வ/60 மீது பேருந்து ஏறியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலியானார்.அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்துக் கழக மாநகர பேருந்து பணிமனையில் ஊழியரா வழக்கமாக காலை பணிக்கு வந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார் அப்பொழுது பேருந்து ஒன்றை எடுத்து பின்னே எடுக்கும் பொழுது அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டி பேபி 60 மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது நடந்த விபத்தில் மூதாட்டி மேல் பின் சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். பணி மனை மேலாளர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் மூதாட்டி பேபியின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்பொழுது மூதாட்டியுடன் உடல் ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு ஆய்வு செய்ய அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை என்பது நடைபெற்று வருகிறது. தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டியை அரசு போக்குவரத்து கழக ஊழியரே கவனக்குறைவால் பேருந்தின் பின்புறத்தில் ஏற்றி விபத்து ஏற்படுத்திய மூதாட்டி உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்