தகாத வார்த்தையால் தினமும் திட்டிய ஆசிரியர் - மனமுடைந்த பள்ளி மாணவி விபரீத முடிவு

x

சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரம் தொடர்பாக, தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் விசாரணை மேற்கொண்டார்

கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்

இந்த மாணவியை, ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அந்த மாணவி, தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரம் தொடர்பாக, தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆனந்த குமார். பள்ளிக்கு நேரில் சென்று பள்ளியின் இயக்குனர், ஆசிரியர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்