சவுதியில் உயிரிழந்த தமிழக மீனவர்- கண்ணீருடன் கலெக்டரிடம் கதறி அழுத குடும்பத்தினர்

x

சவுதி அரேபியாவில் உயிரிழந்த மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு, அவரது குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைகுடியை சேர்ந்த முனீஸ்வரன், கடந்த ஓராண்டாக சவுதி அரேபியாவில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், முனீஸ்வரன் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், முனீஸ்வரன் உடலை சொந்த ஊருக்கு எடுத்துவரக்கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்


Next Story

மேலும் செய்திகள்