கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர்... கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

x

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக கல்லணையிலிருந்து உபரி நீரானது, கொள்ளிடம் ஆற்றின் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்திலும், அதனை சார்ந்த தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள், சம்பந்தப்பட்ட வட்டாட்சியரின் உரிய அறிவுரைக்குப் பின்னர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்குமாறும், உரிய பாதுகாப்பு ஏதுமின்றி கொள்ளிடம் ஆற்றில் குளித்தல், மீன் பிடித்தல், செல்பி எடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுமெனவும் கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்