கர்நாடகாவில் திடீர் பதற்றம்.. இஸ்லாமிய தோழியை பார்க்க சென்ற இளைஞர்.. 10 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

x

கர்நாடகாவில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர்.

கர்நாடகாவின் கொப்பள் மாவட்டத்தில் உள்ள ஹூலிஹைதர் கிராமத்தில், முஹரம் பண்டிகையின் போது இந்து சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது இஸ்லாமிய தோழியை பார்க்க சென்றதாக தெரிகிறது. அப்போது அந்த பெண்ணின் உறவினர்கள் இளைஞரை கண்டித்துள்ளனர். இதனால் இளைஞர் கோபமடைந்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஒருவருக்கொருவர் பலத்த ஆயுதங்களை கொண்டு தாக்கி கொண்டதில், பாஷா வாலி மற்றும் யெனகப்பா தலவாட் ஆகியோர் படுகாயங்கள் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் 6 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமத்தில் அடுத்த 10 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறபித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்