கட்டிடத்தில் திடீர் வெடி விபத்து - 2 இளைஞர்கள் உயிரிழப்பு சிவகாசியில் பரபரப்பு

x

சிவகாசி அருகே அனுமதி இல்லாத கட்டிடத்தில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.சிவகாசி அருகே உள்ள பூசாரித்தேவன் பட்டியை சேர்ந்த திருப்பதி என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இன்றி பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்து வந்த‌தாக கூறப்படுகிறது. இந்நிலையில், பட்டாசு தயாரிப்பு பணியின் போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி மற்றும் நாகராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி திருப்பதி, நாகராஜ் இருவரும் உயிரிழந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்