ராஜஸ்தானில் அரசியலில் திடீர் குழப்பம் - முடிவை மாற்றிய அசோக் கெலாட்

x

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தலில் போட்டியிட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதாக கூறப்பட்டது. எனினும், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட், ராஜஸ்தானில் நீடிக்கும் அரசியல் குழப்பத்தின் காரணமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். சச்சின் பைலட் முதல்வராக தேர்வு செய்வதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் தொடர்பாக சோனியா காந்தியிடம் மன்னிப்பு கேட்டதாகவும் குறிப்பிட்டார். இதனிடையே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திக் விஜய் சிங் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்