சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்... காவலாளியை கல்லால் அடித்தே கொன்ற மாணவர்கள்.. சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை மடிப்பாக்கத்தில் சிறுநீர் கழித்த சிறுவர்களை சத்தம் போட்ட காவலாளி, கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மடிப்பாக்கம், ராம்நகர் பகுதியில் காலி மைதானம் உள்ளது. இங்கு பள்ளிக்கரணையை சேர்ந்த முருகேசன் என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், மைதானம் அருகே சிறுநீர் கழிக்க வந்த 2 மாணவர்களை, காவலாளி முருகேசன் திட்டி அனுப்பி வைத்த‌தாக தெரிகிறது. இதனால் அந்த சிறுவர்கள் முருகேசன் மீது கற்களை எரிந்துள்ளனர்.

இதில், முருகேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் மருத்துவமனையில் முருகேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்