மாணவனின் பிறப்புறுப்பில் சக மாணவர்கள் தாக்குதல்... - சென்னை மத்திய அரசு பள்ளியில் அதிர்ச்சி..!

x

சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் கொடூரமாக பிறப்புறுப்பில் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன், கே.கே நகரில் அமைந்துள்ள மத்திய அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். புதுச்சேரியில் படித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னைக்கு குடிபெயர்ந்து வந்து இந்த பள்ளியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுவனை உடல் ரீதியாக சக மாணவர்கள் கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சக மாணவர்களுடன் பிரச்சினை ஏற்படவே அவர்கள் ஒன்று சேர்ந்து சிறுவனை தாக்கி உள்ளனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை ஆசிரியர்களிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அவர்கள் மற்ற மாணவர்களை எச்சரித்துள்ளனர்.

புகார் செய்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் கடந்த 21ஆம் தேதி மாணவனை ஒன்று சேர்ந்து தாக்கினர். பின்னர் மாணவனை நிர்வாணமாக்கிய அவர்கள், அவரின் பிறப்புறுப்பில் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தாக்குதல் நடத்திய மாணவர்கள் ஒவ்வொருவரின் வீட்டிற்கு நேராக சென்ற போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்