மாணவி தீக்குளித்து தற்கொலை...கடைசி நொடியில் அளித்த வாக்குமூலம் - வெளிவந்த பகீர் தகவல்

x

தர்மபுரியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், வீட்டில் தனியாக இருந்த போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்னர் மாணவி அளித்த மரண வாக்குமூலத்தில், தான் முனிரத்தினம் என்பவரை காதலித்ததாகவும், அவர், திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது. இதுக்குறித்து உயிரிழந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்