மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை சேர்க்க மக்களிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை.. அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

x

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியின் போது பொதுமக்களிடம் பணம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் கடும் எச்சரிக்கை

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்சார வாரியம் சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார்

அமைச்சர் செந்தில்பாலாஜியின் உத்தரவுப்படி அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை

சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

இணைப்பு பணி நடைபெறும் போது கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கணினிகள் தயாராக வைத்திருக்க வேண்டும்

காலை 10.30 மணி முதல் மாலை 5.15 வரை நடைபெறும் முகாம்களுக்காக மின்வாரிய அதிகாரிகள் உணவு இடைவேளை, தேநீர் இடைவேளியின்றி பணியாற்ற உத்தரவு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் அவசியம் குறித்த விவரங்கள் பிளக்ஸ் போர்டுகள் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்

இணைப்பு பணியை மேற்கொள்வதற்காக நுகர்வோர்களிடம் பணம் பெற்றதாக புகார் வந்தால் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்


Next Story

மேலும் செய்திகள்