"திமுக அமைச்சர்களின் பேச்சு வேதனை அளிக்கிறது" - திருமாவளவன் பேட்டி

x

சில திமுக அமைச்சர்களின் பேச்சு, வருத்தத்தை அளிக்கின்றன என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்குத் தடை விதித்திருப்பதை வரவேற்பதாகவும், அதே நேரம் சமூக நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பது ஏற்புடையதல்ல என்றும் கூறினார். இதுதொடர்பாக காவல் துறை தலைவரை சந்தித்து கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் கூறினார். சில நேரங்களில் திமுக அமைச்சர்களின் பேச்சு, வருத்தத்தை அளிக்கும் வகையில் இருப்பதாகவும் திருமாவளவன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்